மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் தமிழ் இணைய கல்வி கழக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஓலை சுவடிகளை பாதுகாப்பது, தமிழ் மருத்துவத்தை மேம்படுத்தி அதனை ஊக்குவிப்பது, சிலம்பம் வர்மம் போன்ற கலைகளை வளர்த்தெடுப்பது, தொல்காப்பியம் குறளோவியம் போன்றவற்றை ஆவணப்படுத்துவது குறித்தும், உலகெங்கும் உரைநடைகளை இணையம் மூலம் கொண்டு செல்வது உட்பட்ட பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதித்தார்.





